வெள்ளி, 29/03/24, 4:51 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் [ Add new entry ]

புரிந்திருக்கவில்லை அன்று உன் மௌனம்

சம்மதமா உனக்கு சம்மதமா
என் கேள்விக்கு உனக்கு சம்மதமா
என் கேள்விக்கு உனக்கு சம்மதமா
சம்மதமா உனக்கு சம்மதமா

உன் செவிகளுக்கு என்னுர்வை
கருவாக்கி உரைத்த வினாவுக்கு
சம்மதமா உனக்கு சம்மதமாவென்று
என்னிருவிழியசைக்க 
மௌனமாயிருந்து விடைதந்தாய்
சம்மதமென்று - ஆனால்
புரிந்திருக்காமல் மௌனமாய் வந்த
மௌனபதிலை மௌனமாக்கிவிட்டேன்

மௌனமாக இருக்கும்போது
அன்று புரியாமல்விட்ட
உன் மௌனவிடை மௌனமாக
வந்த என்னை மௌனமாக்கி
மௌனராகம் பாடவைத்துவிட்டன

நான் பாடும் மௌனராகங்கள்
உந்தன் செவிகளுக்கு மௌனமாக
வந்து மௌனமாக மன்னிப்பு
கேட்க்குமென மௌனமாக 
இருக்கிறேன்

நீயும் என் மௌனமன்னிப்பை
மௌனமாக உணர்ந்து
மௌனமாக இன்பவாழ்வை
வாழ மௌனமாக வேண்டுகிறேன்

அன்று உன் மௌன விடையை
புரியாமல் மௌனத்தால் மௌனமாக்கியதால்
இன்று மௌனமென்ற தண்டனையை ஏற்று
மௌனமாக இருக்கிறேன்.

Category: காதல் கவிதைகள் | Added by: tamil (17/05/11) | Author: பைரவசபேஸ்
Views: 2411 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]