வியாழன், 25/04/24, 11:19 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » உறவு கவிதைகள் [ Add new entry ]

அன்னையே தெய்வம்…

தாயே அன்று
உந்தன் மடியில்
மறந்து போன

என் எல்லா சோகமும்
ஒன்று சேர்ந்து
என்னைக்கொல்கிறது

எனைத் தூங்க வைக்க
தூரத்தில் நீ என்பதால்

*
இந்த உலகில் எந்த
மூலையிலும்
கிடைக்கவில்லை

உந்தன் கருவறையில்
கிடைத்த எனக்கான
பாதுகாப்பு

*

என் மேலான உந்தன்
கவனத்துக்காகவே

எத்தனை முறை
வேண்டுமானாலும்

குழந்தையாய்
பிறக்கலாம்
உனக்கு நான்

*

எந்தப் பாசப்படியைக்
கொண்டு நிறுத்தாயோ
தெரியவில்லை

உன் எல்லா
குழந்தைக்கும்

ஒரே அளவிலான
அன்பையே
காட்டுகிறாயே

*

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்து
கொண்டேன்

நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை

*
உன்னில் தடுக்கி
விழுந்தபோதும்

உன் பக்தனாய்
அம்மா
என உன்னையே
அழைத்தபடி
விழுந்திருக்கிறேன் நான்

*
நான்
பார்த்திருக்கிறேன்

உன் கண்
வலிக்காக அழாமல்

என் மேல்
விழுந்த தூசிக்காய்

நீ கண்ணீர்
சிந்தியதை

*
அன்று
நிலாவைக் காட்டி
நீ சோறு ஊட்டையில்

அருமை அறியாமல்
உன் கையை தட்டி
விட்டிருக்கிறேன்

இன்று
நிலாவும் இருக்கிறது
சோறும் இருக்கிறது

தூரத்தில் உன் கை
அம்மா
ரொம்பப் பசிக்கிது

Category: உறவு கவிதைகள் | Added by: tamilan (12/03/10)
Views: 1620 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]