வெள்ளி, 03/05/24, 12:24 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் [ Add new entry ]

இணையதளம் கண்டே இறுமாப் புறுவாய்
அன்பானவர்களே,


 உள்ள எழுச்சி உரைத்திட நாங்களும்
 தெள்ளமுதாய்த் தோன்றும் தமிழிலே - உள்ளமெலாம்
 வென்றிடும் வண்ணம் வலைத்தளம் வார்த்தோமே  
 என்றென்றும் காணவே ஈர்ப்பு

  இணையதளம் கண்டே இறுமாப் புறுவாய்
  புனையும் கவிதை புதுமை - இணையில்லா
  நற்றமிழில் நீங்கள் நலம்பல காணவே
  தொற்றெம் இணைய தளம்"

 
 தமிழ்ப்புதையல் தன்னைத் தரணியெங்கும் போற்ற
 தமிழில் இணைய தளத்தை - கமல
 மனமுடைய முத்துராமன் மெச்சும் பிரிட்டோ
 இணைந்து நிறுவ இனிது
 
 செம்மொழி என்ற சிறப்பாலே தித்திக்கும்
 நம்மொழி என்றும் நிலைத்திடும் - எம்மொழி
 ஈடு நமக்கென இன்முகமாய்க் கூறியே
 பாடு பலமாய்ப் புகழ்ந்து
 
 ஓதிட உங்களை உவந்தே அழைத்துநிற்க
 ஆதரவு தந்தால் அழியாதே - சாதகமாய்
 மென்மேலும் நாங்கள் மெருகேற்றித் தந்திடுவோம்
 பொன்போலும் மின்னிடும் பார்
 
 

அன்புடன்

கவிஞர். முத்துராமன்
ஜோ. மார்லன் பிரிட்டோ
Category: ஏனைய கவிதைகள் | Added by: tamilan (20/02/10)
Views: 1063 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]