வெள்ளி, 26/04/24, 2:17 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் [ Add new entry ]

தனிமையில் உன்னினைவோடு
உயிர் மெய் எழுத்துகளை உருக்கி
மெய் நீ எந்தன் உயிர் என்று
செதுக்கி, கோர்த்து, கட்டுகிறேன்
பண்மாலை இங்கு!

சித்தத்தில் கலந்தாய்!
நித்தம் நித்தம் எந்தன்
நினைவுக்குள் நுழைந்தாய்!
வித்தகனாய்  என்னை
விதவித கவிபடைக்க ஆணையிட்டாய்...

கற்றவர்கள் எழுதிவைத்த புத்தகத்தில் காணாதின்பம்
சுட்டுவிழி சுடரோளியே
உந்தன் சொல்லழகில் கண்டேன் பெண்ணே!

ரம்பையாம் ஊர்வசியாம்
இவ்மூலோகத்து பேரழகியாம்
உன்னை கண்டபின்னே இவ்வழகிகள்
இங்கு தேவையில்லை பெண்ணே!!

அழகு என்றால் நீயே என்று கூறமாட்டேன்
எனக்கு அழகு நீதான் என்று
எச்சபையிலும் அடித்து கூறமறக்க மாட்டேன்!!!

என் அழகே நீ இங்கு
என் நினைப்பு வந்ததென்று
மணியடித்து கூற இங்கு என்
மனதுக்குள் பேரின்பம்
நினைவுக்குள் உன் உருவம்
கண்ணுக்குள் பல கவி வடிவம்
இக்கருணை வேண்டும் எனக்கு இங்கு என்றென்றும்!!!!!!

சொல்லடுக்கி சொல்லப்போனால்
சொல்லிக்கொண்டே இருப்பேன் இங்கு நான்

எந்தன் காதலை உன்னிடம்
நாளைக்கும் சொல்ல வேண்டும்
ஆகையால் இன்று இங்கு
முற்று வைப்போம் என் செல்லமே!!!!!!!
Category: காதல் கவிதைகள் | Added by: tamil (02/04/11) | Author: கவிஞர்:திலீபன்
Views: 2617 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]