செவ்வாய், 23/04/24, 2:13 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » நட்பு கவிதைகள் [ Add new entry ]

நவயுக நட்பு
♥ ♥ ♥>>> நவயுக நட்பு<<< ♥ ♥ ♥

முல்லை மொட்டுக்களாய்...
பள்ளிச் சிட்டுக்களாய்...
பகை மறந்து,
பை சுமந்து,
சென்றோமே பள்ளிக்கு....!!!
பதின் ஒரு வருடங்கள்.
பசுமையான வருடல்கள்.
மறக்க முடியா மங்கள நினைவுகள்.
தனிமையில் மீடிப்பர்த்தேன்.
என் இளமை அழுகிறது...!!!
நாங்கள் அடி வாங்காத ஆசிரியர் இல்லை
எங்களின் பகிடி வதைக்கு பலிஆகத
ஆட்களும் இல்லை...!!!
நாங்கள் அங்கு செய்யாத சேட்டையும் இல்லை....!!!
பராமுகமுடன் படித்தோம்,
பக்க விளைவை எதிர் கொள்ள
முடியாமல் தவித்தோம்...!!!
பரீட்சை குறுக்கிட்டது
எங்களின் படிப்புக்கே
முற்றுகை இட்டது.
பெறுபேறும் வந்தது...!!
ஆனந்தத்துடன் இருந்தனர் சிலர்,
அழுகையுடன் இருந்தனர் இன்னும் சிலர்,
மரமாய் இருந்த எம் நண்பர் கூட்டம்
இன்று செடியாய் மாறியது.
உயிர் தோழி மூவருடன்
உயர் தரத்தில் தடம் பதித்தோம்.
புதுப்புது முகங்கள்...
சற்றே ஆறுதலடைண்டன அகங்கள்...
மீண்டும் ஆரம்பம்,
எங்கள் அன்பின் போராட்டம்.
பழைய ஜாபகங்கள் படர்ந்தன.
பிரிந்த தோழிகளின்
நினைவலைகள் நீண்டன...!!!
எமது பாடசாலை
வாகை மரத்திடம் கேட்டுப்பார்,
நாங்கள் செய்த சேட்டைகளை
அது மொழிபெயர்க்கும்...!!!
இதற்குள் உயர்தர வாழ்க்கை
உருண்டோடி விட்டது...!!!
இதை தனிமையில் நினைக்கையிலே
இதயம் சோக கீதம் பாடுது...!!!
அதற்குள் சிலர்,
திருமணமும் முடித்திருப்பார்!
சிலர் பல்கலைக்கழகமும்
சென்றிருப்பார்......!!!
கண்ட இடத்தில் ஒரு புன்னகை
வருடத்துக்கு ஒரு முறை
வாழ்த்து மடல்.....!!!

இப்படிக்கு,
"கவிக்குயில்"
♥ F arika Ansar ♥

Category: நட்பு கவிதைகள் | Added by: tamilan (04/03/10) | Author: F arika Ansar
Views: 4025 | Comments: 5 | Rating: 0.0/0
Total comments: 5
.
.
.
.
.
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]