வியாழன், 28/03/24, 11:27 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » உறவு கவிதைகள் [ Add new entry ]

தாய்ப்பாசம்

ஆயிரம் கைகள்
சேர்ந்து செய்த
மெத்தையில்
படுத்திருக்கிறேன்

உன் இருகையில்
மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்

*

அம்மா உனக்கு
அவ்வளவு பாரமாய்
இருந்தேன் என்றா

பால் கொடுத்து
என்னை வளர்த்தாய்

 நீ
தூக்கவே
முடியாதளவுக்கு

*

வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்

தோற்றுப்போனால்
தேடி வந்து அணைக்க
உன்னைத் தவிர யார்
எனக்கு

*

ஆயிரம் முறை
தலை சீவிய
சந்தோசம்

 நீ
ஒரே ஒரு தடவை
தலை கோதிவிடும்
போது

*

எல்லாம் சேலைதான்
எனினும்

 நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது

*

என்னை நடக்க வைத்துப்
பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட

 நான் விழுந்து விடக்கூடாது
என்ற கவனத்தில்தான் இருந்தது
உன் தாய்ப்பாசம்


Category: உறவு கவிதைகள் | Added by: tamilan (12/03/10)
Views: 2115 | Comments: 1 | Rating: 2.5/2
Total comments: 1
.
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]