வியாழன், 25/04/24, 12:13 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் [ Add new entry ]

ஒர் ஏழை தமிழனாக
தஞ்சை
பெரிய கோயிலை - என்னுடன்
சுற்றினான் ஒரு வெள்ளையன்

அவன்
எந்நாடு என்று நானறியா - இருந்தும்
என்னாட்டுக் கலை கண்டு
வாய்ப்பிளந்த போது
எனக்குள்
ஒரு இராஜராஜன் பெருமிதத்தோடு ...

வானுயர்ந்த கோபுரம் போல்
என்னாடே உயர்ந்தது என்று
தலைநிமிர்ந்து திரும்பினேன் ...

கோயில் தலைவாசலில் - அந்த
அந்நியனைச் சுற்றி ஒரு கூட்டம்
இரு கைகள் எந்தி யாசகம் கேட்டு ...

சற்று முன்
தலைக்கேறிய தலைக்கணத்தில்
தலைக் கவிழ்ந்து நடந்தேன் ...

ஒர்
ஏழை தமிழனாக ...!!!

Category: ஏனைய கவிதைகள் | Added by: tamilan (05/02/10)
Views: 1549 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]