வியாழன், 25/04/24, 5:45 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் [ Add new entry ]

தூங்காதே தம்பி தூங்காதே.....
தூங்காதே தம்பி தூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!


நீ-தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்,
சக்தியிருந்தால் உன்னைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடம் கொடுக்கும்


நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்;

சிலர் அல்லும் பகலும்
தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்ஷடமில்லையென்று
அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக்கொண்டார்-
உன்போல் குறட்டை விட்டோரெல்லாம்
கோட்டைவிட்டார்!


போர்ப் படைதனில் தூங்கியவன்
வெற்றியிழந்தான்-
உயர் பள்ளியில் தூங்கியவன்
கல்வியழந்தான்!
கடைதனில் தூங்கியவன்
முதல் இழந்தான்-கொண்ட
கடமையில் தூங்கியவன்
புகழ் இழந்தான்-
இன்னும் பொறுப்புள்ள
மனிதரின் தூக்கத்தினால்-
பல பொன்னான வேலையெல்லாம்
தூங்குதப்பா!
Category: ஏனைய கவிதைகள் | Added by: tamilan (30/06/09)
Views: 1834 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]