வெள்ளி, 26/04/24, 7:31 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் [ Add new entry ]

புதிய பாரதம் ...!
இராமனுடைய
சிந்தனை எல்லாம்
சீதையை மீட்பது பற்றியது அல்ல.
இலங்கையினை கவர்ந்து
அவனது
இப்போதைய நோக்கம்.

திரௌபதையின் சபதம் முடிக்க
தருமன்
சேர்ந்திருப்பதோ
துச்சாதனர்கள் கூட்டத்தோடு

ஆட்சிக்காக
இலட்சுமணனை ஏலம் விடவும்
துணிந்துவிட்டான்
இந்த இராமன்.
எடுத்தவன் இராவணன் என்பதால்
ஓலம் இடுகிறான்.

அனுமான்
இலங்கையை எரிக்க மறுத்ததால்
அனுமானையே எரித்துவிட்டான்
புரியாத இராமன்.

அரசியலிலே
அனுமான் என்ன
அண்ணன் தம்பி என்ன .....

Category: ஏனைய கவிதைகள் | Added by: (14/07/09) | Author: மட்டுவில் ஞானக்குமாரன்.
Views: 1580 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]