சனி, 20/04/24, 3:03 PM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » செய்திகள் [ Add new entry ]

பேஸ்புக்கில் கற்பனைக் காதலனை உருவாக்கி 15 வயது யுவதியை நம்ப வைத்த மோசடிக்காரர்கள்!
$IMAGE1$
இணையத்தளம் ஊடாக பேஸ்புக் வலையமைப்பைப் பாவித்து கற்பனையில் ஒரு காதலனை உருவாக்கி 15 வயது யுவதியை நம்ப வைத்து, மூன்று மாதங்களின் பின் அவன் தற்கொலை செய்து கொண்டான் அதற்கு நீ தான் காரணம் என்று அந்த யுவதியை அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் மூன்றுமாத தீவிர விசாரணையின் பின்பே இது அம்பலமாகியுள்ளது. இது இணையத்தளம் வாயிலாக இடம்பெற்றுள்ள மாபெரும் அச்சுறுத்தல் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த அச்சுறுத்தலை மேற்கொண்டவர்கள் 16 வயதான இரு யுவதிகளே. போலியான படம் அதன் மூலமான பேஸ்புக் செய்திகள் எல்லாவற்றையும் இவர்கள் கச்சிதமாகச் செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு இந்த விடயம் தெரியவந்தபின் அவர்கள் நடத்திய விசாரணைகளில் இந்த யுவதியை அச்சுறுத்தும் நபர்கள் குறிப்பிடுவதைப் போன்ற ஒரு நபர் பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை என்பது தெரியவந்தது.
Category: செய்திகள் | Added by: tamil (10/03/11)
Views: 921 | Rating: 5.0/1
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]