வியாழன், 25/04/24, 3:01 PM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » செய்திகள் [ Add new entry ]

16 வயது சிறுவனால் காவல்துறை அதிகாரி சுட்டுக் கொலை

செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் காவல்துறை அதிகாரி டேவிட் கிராபோர்ட் பதினாறு வயது சிறுவனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

ஒரே மாதத்தில் இந்நகரில் நடக்கும் மூன்றாவது சம்பவம் இது. பினெல்லாஸ் கவுண்டி ஸ்கூல் சிஸ்டம் பள்ளியில் படிக்கும் இச்சிறுவன் ஏற்கனவே இரு முறை பணத்திற்காக குற்றங்கள் செய்துள்ளான். அதற்காக கைதும் செய்யப்பட்டுள்ளான் என்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் காவல் அதிகாரி சக் ஹார்மன் கூறினார்.

சிறுவர் கொலைக் குற்றங்களில் கைது செய்யப்பட்டிருப்பதால் அவருடைய பெயரை வெளியிடவில்லை. கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இன்னும் கைப்பற்றப்படவில்லை என்றும் அவனுடைய பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் காவல் அதிகாரி ஹாப்மன் கூறினார்.

வேறு யாரும் இக்கொலையில் சம்பந்தப்படவில்லை என்றும் கூறினார். இது போன்ற ஒரு நிலையை அதாவது ஒரு காவல் அதிகாரிக்கும் பதினாறு வயது சிறுவனுக்கும் இடையே நடந்ததை நினைத்துப் பார்க்கவே முடியாது என்றார்.



Source: http://newsonews.com
Category: செய்திகள் | Added by: tamil (26/02/11)
Views: 788 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]