செவ்வாய், 23/04/24, 2:05 PM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » உடல் நலன் [ Add new entry ]

வயிற்று போக்கு
DIARRHEA IN CHILDREN

* உணவிலும் , நீரிலும் உள்ள நோய் கிருமிகள்(VIRUS, BACTERIA, PROTOZOA) வயிற்றில் சென்று வயிற்று போக்கை ஏற்படுத்தும் .

*பாட்டில் பாலே இதற்கு முழு முதல் காரணம் .இதர காரணங்கள் : மூடி வைக்காத உணவு , ஊட்டி எனப்படும் சூபான் (கீழே விழுந்தபின் கழுவாமல் உடனே வாயில் வைப்பது ),சுகாதர குறைவு ....

* குழந்தைகளுக்கு வரும் வயிற்று போக்கிற்கு பெரும்பாலும் வைரஸ் காரணம் .

* பாக்ட்ரியா, ப்ரோடோசோவா, உணவு ஒவ்வாமை - இதர காரணங்கள்

* வைரசில் ROTA VIRUS முதன்மையானது . முதலில் வாந்தியும் பிறகு போக்கும் ஏற்படும் .இதனால் உண்டாகும் வயிற்றுபோகில் அதிகபடியான நீர் இழப்பு ஏற்படும் . மற்றும் சுரம் அதிகமாக இருக்கும் .

* இரத்தம், சளி போன்ற MUCUS , இருந்தால் அது -DYSENTRY -- எனப்படும் .இதில் வயிறு வலி , சுரம் ,வலியுடன் மலம் போகுதல் ஆகிய அறிகுறிகள் காணப்படும். இதில் நீர் இழப்பு குறைவாக இருக்கும் .

*வெறும் நீராக மற்றும் பாதி நீராக போனால் அது DIARRHEA-- எனப்படும் .இதில் நீர் இழப்பு அதிகமாக இருக்கும் .

* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை பட்டினி போடுதல் கூடாது , நீர் இழபிற்கு தகுந்தால் போல் ஊட்டம் அளிக்கவேண்டும் .

*வயிற்றுபோகின் போது நீர் சத்தும் , ஊப்பு சத்தும் குறைவதால் அதை சரிசெய்ய வேண்டும் .

* பால் குடிக்கும் குழந்தைக்கு விடாமல் தாய்ப்பால் தரவேண்டும்

*வீட்டிலேயே முதல் உதவி அளிக்க முடியும்

# ஒரு தம்ளீர் காய்ச்சிய நீர் எடுத்துகொள்ளவும்

#இரண்டு விரலில் சிக்கும் அளவு உப்பு சேர்க்கவும்

#மூன்று விரலில் சிக்கும் அளவு சர்க்கரை சேர்க்கவும்

# நன்கு கலக்கி அடிக்கடி தரவும்

*பாட்டிலில் பால் தருவதை உடனே நிறுத்தவேண்டும் .

*திட , திரவ உணவை நிறுத்தாமல் கொடுத்துகொண்டே இருக்க வேண்டும் .

* வயிற்று போக்கு குறைய மூன்று முதல் ஐந்து நாட்கள் ஆகலாம். எனவே பொறுமையுடன் மருத்துவர் ஆலோசனை பேரில் மருந்து தரவும் . நீர் இழப்பை தடுப்பதே மிக முக்கிய மருத்துவம் ஆகும் .

*போக்கை உடனே நிறுத்த சில மருந்துகள் உள்ளன , அவற்றை குழந்தைகளுக்கு தரக்கூடாது . LOPERAMIDE (andial, loperate,loperatil,) என்ற மாத்திரையை தந்தால் போக்கு உடனே நின்று விடும் , ஆனால் வயிறு வீங்கும் , சுரம் வரும் , செப்டிக் ஆகிவிடும் . இந்த மாத்திரையை பெரியவர்களுக்கு தரலாம் , ஆனால் 12 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு தரக்கூடாது .

*எனவே வயிற்று போக்கை அதன் போக்கிலேயே விட்டு மருத்துவம் செய்ய வேண்டும் .

* இப்பொழுது ORS எனப்படும் உயிர் கரைசல் கிடைக்கிறது. அதை வாங்கி வீட்டில் வைத்திருந்தால் தேவை படும் போது முதல் உதவியாக தரலாம் .



Source: http://www.doctorrajmohan.blogspot.com
Category: உடல் நலன் | Added by: razmohan (25/07/10) | Author: razmohan
Views: 1092 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]