செவ்வாய், 23/04/24, 9:05 PM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » பாலியல் [ Add new entry ]

வேதனை தீ...ஆசை நெருப்பு!

தடுமாறும் மனது தடம்புரளும் மற்றொரு அத்தியாயத்துக்கு விதையாக அமைகிறது. அந்த விதை தாம்பத்ய உறவில் ஏற்படும் விரிசலுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. தாம்பத்ய வாழ்க்கையில் அர்த்தங்களைப் போட்டோந்து கொள்ளாத பலர் வேதனை நெருப்பில் வெந்து துடிதுடிக்கிறார்கள்.:

லட்சாதிபதி குடும்பத்தைச் சேர்ந்த ரேகா, சிறு வயதில் இருந்து துளி கவலைகூட பட்டதில்லை. செல்வ செழிப்பில் வளர்ந்த ரேகாவுக்கு நிறைய பிரண்ட்ஸ். கல்லூரி படிப்பில் ரேகா சுமார் தான் என்றாலும், செக்ஸ் விஷயங்களில் அத்துப்படி. ஆங்கில செக்ஸ் புத்தகங்களைப் படித்துவிட்டு தனது பிரண்ட்ஸ்களுடன் லூட்டி அடிப்பது அவளது பொழுதுபோக்கு. விடுமுறை நாட்களில் தன் பிரண்ட்ஸ்களை வீட்டுக்கு அழைத்து புளுபிலிம் கேசட்டுகளைப் போட்டு பார்க்கும் அளவுக்கு துணிந்துவிட்டாள். அவளுடைய பிரண்ட்ஸ்களுக்குப் பயமாக இருந்தாலும், ரேகா கொடுத்த தைரியத்தில் நிர்வாண படங்களை டிவியில் போட்டு பார்த்தனர். 

தன் தோழிகளை கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் அளவுக்கு ரேகா நடவடிக்கைகள் போய்விட்டன. ஒருநாள் ரேகா வீட்டுக்கு, அவளது கம்பெனி எக்சிகியூட்டிவ் விஜய் வந்தார். திருமணமாகாத விஜய் கலகலப்பான டைப். முதலில் ரேகாவுடன் பழக ஆரம்பித்தான். அதன்பின் அடிக்கடி வெளியே போட்டோல் செல்லும் அளவுக்கு போனது.

ஒருகட்டத்தில் ரேகாவின் வீக்னஸைப் போட்டோந்து கொண்ட விஜய் தனது அறைக்கு அழைத்து சென்று புளுபிலிம் போட்டு காட்டினான். ஏற்கனவே, பல படங்களைப் பார்த்து பழகிப்போன ரேகா, தனது ரசனைக்கு விஜய் ஒத்துப்போகிறான் என்று நினைத்து ஐக்கியமானாள். அடிக்கடி விஜய் அறையில் ரேகா தன் உடலை அவனுக்கு தாரைவார்த்து வந்தாள்.

திடீரென்று, ரேகாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடந்தது. விஜயின் ரசனைகளில் தனி உலகத்தில் வலம் வந்த ரேகாவுக்கு புதிய கணவன் பிரகாஷின் ரசனைகளுக்கு ஒத்துப் போகவில்லை. பலவிஷயங்களில் அறிவாளியான பிரகாஷோடு ரேகாவால் பல சப்ஜெக்ட்களை மனம்விட்டு பேசமுடியவில்லை. எதையாவது பிசினஸில் சாதிக்க வேண்டுமென்ற பிரகாஷ் முழு முச்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

ஆனால், ரேகாவோ, மீண்டும் விஜய் பழக்கத்தை கணவனுக்கு தெரியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். உடல் சுகம் மட்டும் தான் வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டிருக்கும் எத்தனையோ பெண்களுக்கு வேறு எதுவும் கண்ணில் தெரியாது. அதைப்பற்றி தெரிந்து கொள்வதிலும் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

தங்களது ஆசை நெருப்பை அணைப்பதற்காக, வேதனை தீயில் வெந்து துடிதுடித்துக் கொண்டிருக்கும் ரேகா போன்ற பெண்கள் இன்னும் பல ஆண்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணோ, பெண்ணோ, திருமணத்துக்கு முன் எந்த தவறு செய்திருந்தாலும், காதல், ரகசிய உறவு, கள்ளக் காதல் ஆகிய விஷயங்களில் சிக்கியிருந்தாலும், திருமணம் ஆனபின் நமது மனக்கட்டுபாட்டு வேலியை போட்டுவிடவேண்டும்.

Category: பாலியல் | Added by: tamilan (16/02/10) | Author: டாக்டர். ஷர்மிளா
Views: 3818 | Comments: 1 | Tags: வேதனை தீ...ஆசை நெருப்பு! | Rating: 0.0/0
Total comments: 1
.
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]