வெள்ளி, 26/04/24, 3:51 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » மருத்துவம் [ Add new entry ]

நினைவாற்றலை அதிகரிக்க என்ன செய்யலாம்?


மனிதனின் நினைவாற்றலுக்கும் மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. உண்மையில் மனதை எந்தளவுக்கு ஒரு முகபடுத்துகின்றோமா அந்தளவிற்கு எங்களது ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும்.

அடிப்படை நினைவாற்றல் செயற்பாட்டை மனதின் ஒருநிலைப்பாட்டை மையமாகக் கொண்டு விபரிக்க முடியும். யோகா பயிற்சிகளின் மூலம் நினைவுச் செயற்பாட்டை அதிகரிக்க முடியும். அறிவு பலமாக அமையாது, சரியான அறிவே சக்தியாக கருத முடியும்.

இந்தப் பகுதியில் நினைவாற்றலை அதிகரிப்பதற்கு எவ்வாறான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும், அதற்கான ஏதுக்கள் பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளது.

மனதை ஒருநிலைப் படுத்துவதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்க முடியுமா? ஆம், மனதை ஒருமுனைப்படுத்துவதன் மூலம் மூளைக்கு குறியேற்றப்படும் தரவுகளின் அளவினை வெகுவாக அதிகரிக்க முடியும்.
மனதை ஒருநிலைப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான, சக்தி வாய்ந்த மூளையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அநேகமானவர்கள் தங்களது நினைவாற்றறை விருத்தி செய்வதில் சிரத்தை காட்டுகின்றனர். அடிப்படை நினைவுத் தொழிப்பாடு மற்றும்  மனதை ஒருநிலைப்படுத்தல் ஆகியன சிறந்த கலவையை உருவாக்குகின்றன. மூளையில் தகவல்களை ஆழமாக குறியேற்றுவதன் மூலம் தேவையான நேரத்தில் வேகமாக அவற்றை ஞாபகப்படுத்திக்கொள்ள முடிகிறது.

நினைவாற்றலை விருத்தி செய்வதற்கு பின்வரும் அடிப்படைக் காரணிகள் முதன்மையானவை. அடிப்படை நினைவு தொழிற்பாட்டை சீராக மேற்கொள்வதற்கு முதலாவது,

பத்து கோப்பை நீர் பருக வேண்டும்.

நாள் ஒன்றுக்கு 6-8 மணித்தியாலம் உறங்க வேண்டும்.

நினைவாற்றலை அதிகரிக்கக் கூடிய உணவுகளை வகைளை உட்கொள்ளல்.

பழங்கள், காய்கறி வகைகள்  நினைவாற்றலை அதிகரிக்கும் விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ளல் ஏனெனில் காய்கறி பழ வகைகள் சமிபாடடைவதற்கு இந்த மாத்திரைகள் உதவியாக அமைகின்றன.

இரண்டாவது, ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட பயிற்சி முறைகளை பின்பற்றுதல்

மூன்றாவதாக மூளையில் குறியேற்றம் செய்வது தொடர்பிலான பயிற்சிகளை மேற்கொள்ளுதல். ஆரோக்கியமான மூளைகளில் மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் அதிகளவான தரவுகளை உள்ளீடு செய்ய முடியும்.

அடிப்படை நினைவுத் தொழிற்பாடு, மூளை குறியேற்றம் ஆகியவற்றில் போதியளவு பயிற்சி பெற்றுக் கொண்டதன் பின்னர் மனதை ஒரு நிலைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்த முடியும். சீரிய முறையில் மனதை ஒழுங்கு படுத்துவதன் மூலம் இலகுவில் பாடங்களை கற்றுக்கொள்ள முடியும்.

யோகா பயிற்சி மனதை ஒருநிலைப் படுத்துவதற்காக மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். தியானம், மனதை ஒருநிலைப்படுத்தல் மற்றும் சிந்தனைக் கூர்மை போன்றவற்றை யோகாப் பயிற்சி மூலம் விருத்தி செய்ய முடியும்.

யோகா பயிற்சிகளின் மூலம்
1. நினைவாற்றலை அதிகரிப்பதற்கு தேவையான மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு
2. மூளையில் தகவல்களை காத்திரமான குறியேற்றம் செய்தல்
அநேகமான யோகா பயிற்சிகள் உடல், உள்ளம் மற்றும் ஆத்மா ஆகியவற்றை ஒன்றிணைக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது.

மனதை ஒருநிலைப்படுத்துவதன் மூலம் எவ்வாறு நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என கேள்வி எழுப்பக்கூடும். ஆரோக்கியமான மூளைகளில் தகவல்களை குறியேற்றம் செய்வதன் மூலம் சிறந்த நினைவாற்றலை பெற்றுக்கொள்ள முடியும்.

மூளைக் குறியேற்று முறைகள்

ஆரோக்கியமான மூளையில் அதிகளவான தரவுகளை குறியேற்றி வைக்க முடியும். ஆரோக்கியமான சக்தியான மூளையின் மூலம் கேட்ட மாத்திரத்தில் தரவுகளை ஞாபகப்படுத்தி பதில்களை வெளியிட முடிகின்றது.

நினைவாற்றலை விருத்தி செய்ய விரும்பும் பயிலுனர்கள் மாதமொன்றுக்கு மூன்று மூளைக் குறியேற்று செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும். மூளைக் குறியேற்று பயிற்சிகள் மிகவும் இன்றியமைதாதவை.

மேலதிக ஆற்றல்கள்

பின்வரும் பயிற்சிகளின் மூலம் சிறந்த ஞாபக சக்தியைப் பெற்றுக் கொள்ள முடியும்
1.  அடிப்படை நினைவுத் n;தாழிற்பாடு
2.  நிரூபிக்கப்பட்ட குறியேற்ற வழிமுறைகள்
3.  குறியேற்று திறமையை விருத்தி செய்வதற்கான பயிற்சிகளில் ஈடுபடுதல். கூடுதலான தொடர் பயிற்சியின் மூலம் நிறைவாற்றலை பாரியளவில் விருத்தி செய்ய முடியும்.

மனதை ஒருநிலைப்படுத்தல் மற்றும் சிந்தனை கூர்மை ஆகியவற்றின் மூலம் நினைவாற்றலை விருத்;தி செய்ய முடியும்.

Category: மருத்துவம் | Added by: tamil (27/05/11)
Views: 4073 | Rating: 2.0/1
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]