சனி, 20/04/24, 11:38 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » விநோதங்கள் [ Add new entry ]

பாம்புடன் பல்லாங்குழலியாடும் விசித்திரக் குழந்தை! (வீடியோ இணைப்பு)
இவ்வீடியோ 2007 ஆண்டு வெளியானது

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது அந்தக் காலத்து முது மொழி. உண்மையும் கூட... பாம்பைக் கண்டாலே கூடுதலானவர்களுக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு விடும்.

ஆனால் இங்கே பாருங்கள்... இந்தியாவில் வறிய விவசாய குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஒரு வயதுப் பெண் குழந்தை ஒன்றின் விளையாட்டுப் பொருட்களாக உயிருள்ள பயங்கரமான பாம்புகள் உள்ளன.

வீட்டின் வறுமை நிலை காரணமாக குழந்தைக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுக்க தகப்பனிடம் பணம் இல்லை. எனவே பாம்புகளை உயிருடன் பிடித்து வந்து மகளிடம் விளையாடக் கொடுக்கின்றார் இத்தகப்பன்.

தகப்பனும், தாயும் வேலை செய்யும் நேரங்களில் பாம்புகளுடன்தான் சிறுமியின் பொழுது கழியும். பாம்புகளுடன் விளையாடுகின்றமை சிறுமிக்கு அலாதிப் பிரியம்.

விளையாட்டுப் பொருட்களின் விலைகள் அதிகம்தான், அதற்காக உயிரைக் குடிக்கக் கூடிய பாம்புகளுடன் குழந்தைக்கு சகவாசத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றமை எவ்வகையில் நியாயம்? என்று ஏராளமான விமர்சனங்கள் எழுந்து உள்ளன. ஆனாலும் அந்தக் குழந்தை விடுவதாயில்லை...

Category: விநோதங்கள் | Added by: tamil (14/03/11)
Views: 1659 | Rating: 1.0/1
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]